போதைப் பொருளுடன் யுவதி கைது!

86 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட இருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5.15 மணியளவில் மீதொடமுல்லை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது , 503 கிராம் 540 மில்லிகிராம் ஹேரோயின் போதைப்பொருளும் , 66 கிராம் 56 மில்லி கிராம் கொக்கேன் போதைப்பொருளும் , 2 கிராம் 90 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளும் , டான்சின் டெப்லட் என்ற 42 மாத்திரைகளும் , 10 கைப்பேசிகளும் மற்றும் 74 ஆயிரத்து 750 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 8,628,000 ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண்ணின் வயது 25 என குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நாளைய தினம் புதுக்கடை இல 3 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.