வடக்கு மருத்துவர்கள் திங்கள் போராட்டம்!!
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும்
(யாழ்ப்பாணம் போதன மருத்துவமனை தவிர்த்து) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளது.
(யாழ்ப்பாணம் போதன மருத்துவமனை தவிர்த்து) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளது.
திங்கட்கிழமை காலை 8 மணி முதல் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்தச் சங்கம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-,
அரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள் (புதிய சுற்றறிக்கையின்படி) கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை. வடக்கு மாகாணத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டுமே அவை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அரச மருத்து அதிகாரிகள் தாய்ச் சங்கம் பல தடவைகள் வடக்கு மாகாண சுகாதார அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்து.
அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் வடக்கு மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருடனும், மாகாண சுகாதாரப் பணிப்பாளருடனும் பேசசு நடத்தியது. மேலதிக கொடுப்பனவுகள் சிறிது காலத்தில் வழங்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர். எனினும் அவை வழங்கப்படவில்லை.
இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் (கிழக்கு மாகாணம் உட்பட) இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் நாம் பணிப்புறக்கணிப்பு நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
பணிப்புறக்கணிப்பால் நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வடக்கு மாகாண சபையும், அதன் அதிகாரிகளுமே பொறுப்புக் கூற வேண்டும். பணிப் புறக்கணிப்பு நடத்தப்படும் நேரத்தில் உயிர்காக்கும் அவசர சிகிச்சைகள் அனைத்து மருத்துமனைகளிலும் வழங்கப்படும். எமக்கு உரிய பதில் வழங்கப்படாவிட்டால் போராட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். – என்றுள்ளது.
கருத்துகள் இல்லை