தடுப்பு முகாம்களை பார்வையிடுவது தொடர்பில் புதிய ஒப்பந்தம்!

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தோற்றம் பெற்றுள்ள தடுப்பு முகாம்களை பார்வையிடுவது தொடர்பில் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் யோசனையொன்றை முன்வைத்துள்ளது.

இதனடிப்டையில் சுய சுதந்திரத்தினை இழந்த நபர்களுக்கு விடிவினை ஏற்படுத்துவதற்கான ஒத்துழைப்புகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகள் தொடர்பில், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் குறித்த முன்மொழியப்பட்டுள்ள  ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.