யாழில் இன்­பு­ளு­வன்ஸ் தொற்­றுக்­கான அறி­கு­றி­கள்!

இன்­பு­ளு­வன்ஸா வைரஸ்’ தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் தென்­பட்ட 12 பேர் யாழ்ப்­பா­ணத்­தில்  கடந்த சில நாள்­க­ளில் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளின் நோய் குறித்து மேல­தி­கப்  பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன என்று யாழ்ப்­பா­ணப் பிராந்­திய தொற்று நோய் தடுப்­புப் பிரிவு  அதி­காரி மருத்­து­வர் ஜி.ரஜீவ் தெரி­வித்­தார்.

 ‘‘பன்­றிக் காய்ச்­சல் எனப்­ப­டும் ‘இன்­பு­ளு­வன்ஸா வைரஸ்’ தொற்­றுக்­கான அறி­கு­றி­க­ளோடு கடந்த  சில வாரங்­க­ளில் 12 பேர் அடை­யா­ளம் காணப்­பட் டுள்­ள­னர். அவர்­க­ளின் குருதி மாதி­ரி­கள்  பெறப்­பட்டு மேல­திக பரி­சோ­த­னை­க­ளுக்­காக கொழும்­புக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன.

 தற்­போ­தைய கால­நிலை இந்த நோய் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பாக இருக்­கின்­றது. 2008 மற்­றும்  2009ஆம் ஆண்­டு­க­ளி­லும் இந்த நோய் தாக்­கம் இனங்­கா­ண­பட்­டது. எனி­னும் கட்­டுப்­பாட்­டுக்­குள்  கொண்­டு ­வ­ரப்­பட்­டது’’ என்று மருத்­து­வர் தெரி­வித்­தார்.

தென்­ப­கு­தி­யில் அண்­மை­யில் இந்த நோய் தாக்­கம் இனங்­கா­ணப்­பட்­டி­ருந்­தது. அத­னைத்  தொடர்ந்தே வடக்­கில் இதற்க்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­டுள்­ளன.

 இது காற்­றால் பர­வும் நோயாக இருப்­ப­தால் பொது இடங்­க­ளுக்கு அனா­வ­சி­ய­மா­கச் செல்­லு­தல்  மற்­றும் சன நெரி­ச­லான இடங்­க­ளுக்­குச் செல்­லு­தல் என்­ப­வற்றை இயன்­ற­ளவு தவிர்ப்­ப­தோடு  மக்­கள் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்­டும் என்று மருத்­து­வர்­கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­னர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.