பீரிஸ் அரசின் கொள்கையை விமர்சிக்கிறார் !

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை ஒரு தந்திரமான வேலைத்திட்டம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியானது இலங்கையில் மாத்திரமல்ல முழு தெற்காசியாவிலும் நடந்த மிகப் பெரிய மோசடி. இதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. பிரதமருக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வரும் தேவையில்லை. தற்போதைய அரசாங்கம் மாறி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு நியாயத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.