யாழ் தெல்லிப்பழையில் ரவுடிக் கும்பல்கள் அடாவடித்தனம்!

தெல்லிப்பழை எட்டாம் கட்டைப் பகுதியில் ,வாள்கள், இரும்புக் கம்பிகள் என்பவற்றுடன் சுமார் 20 பேர் , 10 மோட்டார் சைக்கிள்களில் இரவிரவாக அந்தப் பகுதியில் நடமாடியதால் பொதுமக்களிடையே பெரும் அச்சநிலை தோன்றியிருந்தது.

மாற்றுக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை, இன்னொரு கும்பல் வெட்டுவதற்கு துரத்தியதாகவும், அவர் தப்பியோடி பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்ததால் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகின்றது.

பின்னர் இரு தரப்பினரையும் தெல்லிப்பழை பொலிஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் என்றும், அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் விசனமடைந்துள்ளனர்.

வாள்வெட்டுக்கும்பலில் பிரதான சூத்திரதாரி கைக்குண்டு ஒன்றை வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதும், இந்து அமைப்பு ஒன்றில் அங்கம் வகிப்பவர் எனவும் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.