யாழ் மல்லாக துப்பாக்கிச்சூட்டு தொடர்புடைய 14 பேர் கைது!

யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் இதுவரை 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட 6 பேரும் நேற்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் பகுதியில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் 19 முதல் 24 வயதுக்குட்பட்டோர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவின், மல்லாகம் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 33 வயதான பா.சுதர்சன் என்பவர் உயிரிழந்தார்.

தெல்லிப்பளை – மல்லாகம் சந்தியில் கூரிய ஆயுதங்களுடன் இரு குழுக்கள் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக சென்ற பொலிஸாரை வாளால் தாக்குவதற்கு முயற்சித்தவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.