விடுவிக்கப்பட்ட காணிகளில் 16 வீடுகளே வசிக்கக் கூடிய நிலமையில்!
வலி.வடக்கில் இராணுவத்தினர் வசமிருந்த 33 ஏக்கர் காணிகள் நேற்று மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டன. ஜே/236 கிராம
அலுவலர் பிரிவில் பளைவீமன்காமத்தில் உள்ள காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கையளிக்கும் ஆவணத்தை தெல்லிப்பழைப் பிரதேச செயலரிடம் யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவத் தலைமையகம் வழங்கியுள்ளது.
27 ஆண்டுகளின் பின்னர் இந்தக் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காணி உரிமையாளர்கள் காணிகளைப் பொறுப்பேற்க வர வேண்டும் என்று பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ கோரியுள்ளார்.
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளன. 16 வீடுகள் மக்கள் வசிக்கக் கூடிய நிலையில் காணப்படுகின்ற என்று கூறப்படுகின்றது. அவை படையினரின் பாவனையில் இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. விடுவிக்கப்பட்ட பகுதியில் படையினரின் பயன்பாட்டில் இருந்த விகாரை ஒன்றும் உள்ளது.
இதுவரை விடுவிக்கப்படாதிருந்த கிராமக்கோட்டடி வீதியும் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த வீதி 700 மீற்றர் நீளமுடையது. விடுவிக்கப்பட்ட பகுதிகளை பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் பார்வையிட்டார். மக்களுடனும் கலந்துரையாடினார்.
அலுவலர் பிரிவில் பளைவீமன்காமத்தில் உள்ள காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கையளிக்கும் ஆவணத்தை தெல்லிப்பழைப் பிரதேச செயலரிடம் யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவத் தலைமையகம் வழங்கியுள்ளது.
27 ஆண்டுகளின் பின்னர் இந்தக் காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காணி உரிமையாளர்கள் காணிகளைப் பொறுப்பேற்க வர வேண்டும் என்று பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ கோரியுள்ளார்.
விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளன. 16 வீடுகள் மக்கள் வசிக்கக் கூடிய நிலையில் காணப்படுகின்ற என்று கூறப்படுகின்றது. அவை படையினரின் பாவனையில் இருந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. விடுவிக்கப்பட்ட பகுதியில் படையினரின் பயன்பாட்டில் இருந்த விகாரை ஒன்றும் உள்ளது.
இதுவரை விடுவிக்கப்படாதிருந்த கிராமக்கோட்டடி வீதியும் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த வீதி 700 மீற்றர் நீளமுடையது. விடுவிக்கப்பட்ட பகுதிகளை பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் பார்வையிட்டார். மக்களுடனும் கலந்துரையாடினார்.
கருத்துகள் இல்லை