மேஜர் ஜெயசீலன் அண்ணா 9ம் ஆண்டு நினைவு நாள்.

மாவீரன் மேஜர் ஜெயசீலன் அண்ணா. 26-06-2008 அன்று வவுனிகுளம் பகுதியில் எதிரியின் சுற்றிவளைப்பை தகர்க்க மேற்கொண்ட கடுஞ்சமரில் வீரச்சாவைத்
தழுவிக் கொண்ட லெப். கேணல். வாணன் ,மேஜர் ஜெயசீலன், மேஜர் தணிகைமாறன், கப்டன் உயிரவன் , கப்டன் கார்வண்ணன், கப்டன் அரசகீதன் , கப்டன் சீராளன் , கப்டன் பாமகன் , லெப். சின்னவன், லெப். மணிமாறன், லெப். அருண்மொழி, வீரவேங்கைகள் வெள்ளைத்தேவன், கலைச்செழியன், அடலூரான், கலைவடிவேல் , ஆற்றலழகன் , 2ம் லெப். இளங்கதிர் முதலான அனைத்து மாவீரர்களையும் நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்துகின்றோம் .

சிற்றப்பாவின் வழியில்
இயக்கத்தில் இணைந்தான் ஜெயசீலன்
அழகு தமிழ்ச் சொற்களை 
அடுக்கிக் கவிதை புனையும்

போராளிக் கலைஞன்
போர்ப்பயிற்சி ஆசிரியன்
கனரக ஆயுத சூட்டாளன்
மோட்டார் கொமாண்டர்
முறியடிப்பு அணி லீடர் என
களமுனையின் தேவைக்கேற்ப
பல்வேறு பரிமாணங்களில்
சளைக்காமல் சமராடிய


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.