வலி.வடக்கில் அடுத்த வாரம் ஒரு பகுதி நிலப்பரப்பு விடுவிக்கப்படலாம்??

வலிகாமம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள சில பகுதிகள் அடுத்தவார முற்பகுதியில் விடுவிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.


இதன்படி ஜே/251 மயிலிட்டிதுறை வடக்கு, ஜே/ 254 பலாலி வடக்கு ஆகியவற்றின் சில பகுதிகளும்

ஒட்டகபுலம் மற்றும் வசாவிளான் வைரவர் கோயில் பகுதியிலுள்ள குறிப்பிட்ட சில காணிகளும் விடுவிக்கப்படவுள்ளது.

இப்பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்கள் முட்கம்பி வேலிகளை இராணுவத்தினர் அகற்றி வருகின்றனர்.

இவ்வருடம் வலி.வடக்கில் மக்களின் காணிகள் பகுதி பகுதியாக   விடுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.