முல்லைத்தீவில் பதற்றம் அதிரடி படையினர் தீவிரம்!

முலைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உடைமைகளுடன் பொலிஸாரிடம் சிக்கியபோது தப்பிச் சென்ற சந்தேக நபரை ஸ்ரீ லங்கா பாதுகாப்புப் பிரிவு கடுமையாகத் தேடிவருகிறது.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பேராறு பகுதியில் இன்று காலை வீதி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனையிட்டிருந்தனர்.
இதன்போது விடுதலைப் புலிகளின் கொடி, சீருடை மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி உட்பட இருவரை பொலிஸார் கைதுசெய்தனர்.
மேலும் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையம் அழைத்துவரப்பட்டு விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துவரும் அதேவேளை இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் என பலர் பொலிஸ் நிலையத்தில் குவிந்துள்ளனர்.
பொலிஸ் மற்றும் இராணுவம் இணைந்து தப்பியோடியவரை கைதுசெய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளை காட்டில் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் மேலுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நபரும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.
இதனிடையே முல்லைத்தீவு மற்றும் நெடுங்கேணி பகுதிகளில் பல்வேறு இடங்களில் இராணுவம், பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது
இந்த சம்பவம் மக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.