புதிய அரசமைப்புத் தோற்றால் மக்களிடையே பிரிவினை தோன்றும் – சம்பந்தன் எச்சரிக்கை
துவேச – இனவாதச் சிந்தையுடன் செயற்படுவோர் இந்த நாட்டில் பெரும் எண்
ணிக்கையில் இல்லை. அவர்கள் துரதிர்ஷ்டவசமாக மென்போக்காளர்களைவிட அவர்களின் கருத்துக்கள் முதன்மை பெறுகின்றது. ஆனால் மென்போக்காளர்கள் ஒன்று சேர்ந்து இயங்குகின்றபட்சத்தில் புதிய அரசமைப்பானது மூன்றில்இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யலாம். இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள நோர்வேயின் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க செயலர் ஜென்ப்ரோலிச்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவுக்கும் இடையில் நாடாளுமன்றிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் பணியகத்தில் நேற்றுமுன்தினம் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சந்திப்புத் தொடர்பில் எதிர்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
சந்திப்புத் தொடர்பில் எதிர்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
நாட்டில் நிலவும் தற்கால அரசியல் நிலைகுறித்துச் செயலரைத் தெளிவுபடுத்திய இரா.சம்பந்தன் கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றினை எட்டுவது தொடர்பில் நோர்வே அரசின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்தார்.
பொருளாதார மற்றும் வேலை வாய்ப்பு போன்றவற்றில் எமக்குச் சமஉரிமை வழங்கப்டுவதில்லை. இதனால் எம் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். மாறாக அதிகாரம் சரியாகப் பகிரப்படுமிடத்து இந்தப் பொருளாதார சமூகப் பிரச்சினைகளை மிகபயனுள்ள, நேர்த்தியான வகையில் நிவிர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
வடக்குகிழக்கிலுள்ள காணி விடுவிப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன் இந்த விடயம் தொடர்பில் முன்னேற்றம் காணப்பட்டாலும் போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் கடந்துள்ளமையைக் கருத்திற் கொள்ளுகின்ற போது இந்தக் கருமங்கள் இன்னும் துரிதமாக இடம்பெற்றிருக்கவேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.
ஆயுதப் படையினர் இந்த நிலங்களில் பயிர்ச்செய்கை செய்து விளைச்சலை இந்தக் காணியின் உரிமையாளர்களுக்கே விற்கின்ற துர்ப்பாக்கிய நிலைமையை எடுத்துரைத்த அதேவேளை நல்லிணக்கம் மற்றும் நிலையான சமாதானத்தினைநோக்கிச் செல்வதற்கு இப்படியான நடவடிக்கைகள் தடையாக அமைவதினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எடுத்துக் கூறினார்.
வடக்கு கிழக்கிலுள்ள பல பிரதேசங்களில் காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தொடர்பில் குழுவினரைத் தெளிவுபடுத்திய இராசம்பந்தன் எமது மக்களின் இந்தப் பிரச்சினைகளுக்கானச் சரியானத் தீர்வினை எட்டுவதற்கு பன்னாட்டுச் சமூகம் காத்திரமான ஒரு நிலைப்பாட்டினை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இலங்கை தொடர்பில் நோர்வே அரசு எடுத்துவந்துள்ள நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த இரா.சம்பந்தன் தொடர்ந்தும் அவர்களது ஆக்கபூர்வமான பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார் – என்றுள்ளது.
கருத்துகள் இல்லை