டிசம்பருக்குள் மாகாண சபை தேர்தல்?


எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பதவிக்காலம் முடிவடைந்துள்ள மாகாண
சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக அவர் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் ஆராய்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.