புலிகளை உருவாக்குவதே வடக்கு அரசியல்வாதிகளின் நோக்கம்!

வடக்கை தனித் தமிழீழமாக்கி, விடுதலைப் புலிகளை மீண்டும் தோற்றுவிப்பதே வடக்கு அரசியல்வாதிகளின் பிரதான நோக்கமாக இருக்கின்றதென தேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனி ஈழ நாடாக வடக்கை உருவாக்கி விடுதலை புலிகளின் இயக்கத்தை தோற்றுவிப்பதே வடக்கு அரசியல்வாதிகளின் பிரதான நோக்கம்.
தேசிய அரசாங்கம் இராணுவத்தினரை பலவீனப்படுத்தி, மேற்குலக குறிப்பாக புலம் பெயர் விடுதலை புலிகளின் நோக்கத்தினை நிறைவேற்றவே முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
ஒரு புறம் நாட்டுக்காக போராடிய இராணுவ வீரர்கள் தண்டனை பெற்று வருகின்றனர். மறுபுறம் இராணுவத்தினரது உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகின்றது.
வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை முற்றாக அகற்ற வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும், விக்னேஸ்வரனும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இராணுவ முகாம்களை வடக்கில் இருந்து முற்றாக அகற்றி தனி, ஈழ நாடாக வடக்கை உருவாக்கி விடுதலை புலிகளின் இயக்கத்தை தோற்றுவிப்பதே இவ்வாறான வடக்கு அரசியல்வாதிகளின் பிரதான நோக்கம்.
இது போன்ற வடக்கு அரசியல்வாதிகளின் நோங்கங்களை அரசாங்கம் புரிந்துகொண்டு இராணுவத்தினரது உரிமைகளை பாதுகாக்கும் வழிமுறைகளையே உருவாக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.