துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான தேரரை நேரில் சந்திப்பு!

துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய கோபாவக தம்மிந்த தேரரை பிரதமர் நேரில் சென்று சந்தித்துள்ளார். 


கிரிவெஹர ரஜமகா விகாரை வளாகத்தில் வைத்து கடந்த 12 ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

அவருடைய சுக துக்கங்களை விசாரிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (20) மாலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.