ஆடையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் சட்டத்தரணி!

ஆடையால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் சட்டத்தரணி!

சர்ச்சைக்குரிய ஆடை அணிந்து வந்தமையினால் பெண் சட்டத்தரணியான சுகந்திகா பெர்ணான்டோவை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
மாரவில நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது அவர் பியாமா போன்ற ஆடை ஒன்றை அணிந்து வந்துள்ளார்.
இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என கூறி மாரவில சட்டத்தரணிகள் சங்கம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்தது.
சட்டத்திற்கு உட்பட்டு நீதிமன்றத்திற்கு தகுதியற்ற ஆடை அணிந்து வந்துள்ள விடயம் அவதானிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கேமிந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மற்ற வழக்கில் கலந்து கொள்ளாமல் சுகந்திகா நீதிமன்றத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இது தொடர்பில் அவரிடம் கேட்ட போது, தான் வேறு விதமான ஆடை அணிந்து வந்ததனை ஏற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த காலங்களில் பேஸ்புக் ஊடாக இலங்கை சட்டத்துறை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சட்டத்தரணி சுகந்திகா பெர்ணான்டோ வெளியிட்டிருந்தார்
இந்நிலையில் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சுகந்திகா பெர்ணான்டோ அணிந்து வந்த ஆடை தொடர்பில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.