யாழ் - ஊர்வாவற்றுறைக்கான தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு!

யாழ்ப்பாணம் - ஊர்வாவற்றுறைக்கான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறையில் தனியார் பேருந்து ஊழியர் ஒருவரை பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடத்தினார். அது தொடர்பில் பேருந்து ஊழியரால் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
எனினும் பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தாக்குதல் நடத்தியவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த வலியுறுத்தியே சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றோம்” என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று (1) வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.