முகநூலில் அறிமுகமாகி மோசடி நேரில் மடக்கிய நோர்வே பெண்
முகநூல் ஊடாக வெளிநாட்டுப் பெண்ணிடம் பண மோசடி செய்தார் என்று
குற்றஞ்சாட்டப்பட்டு முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்று நேற்று உத்தரவிட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து முகநூல் ஊடாக நோர்வே நாட்டுப் பெண் ஒருவரை நண்பியாக இணைத்து அவரிடம் நூதன முறையில் 32 இலட்சம் ரூபா பணத்தை மேசடி செய்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
பணத்தை இழந்த பெண் நோர்வேயில் இருந்து இலங்கை வந்து முல்லைத்தீவு மாவட்டப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். பொலிஸாரின் ஆலோசனைப்படி மாவட்ட சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டது.
முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்தில் அந்த நபர் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை