கட்சி நடவடிக்கையில் கலந்து கொள்ளும் வரையில் ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை

அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என அக்கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய அவர்கள் இதுவரையில் கட்சியின் சகல நடவடிக்கைகளிலும் பங்கெடுத்தே வருகின்றனர்.  எனவே அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்குழுவினர் கூட்டு எதிர்க் கட்சியின் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டங்கள் எதிலும் கலந்துகொள்ளாதிருப்பதற்கும் தீர்மானம் எடுக்கப் போவதாக முன்னாள் அமைச்சர் ரி.பீ. ஏக்கநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.