காவல்த்தறை அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க எத்தனித்தவர் கைது!
கொழும்பு- மோதர, ரன்திய உயன பகுதியில் பொலிஸ்
அதிகாரியொருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் லஞ்சம் வழங்க முற்பட்டவர் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 30 வயதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் 5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 50 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரை விடுதலை செய்யுமாறு கூறி அவரது உறவினர் 1 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இலஞ்சம் வழங்க முற்பட்டவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் இவ்விருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அதிகாரியொருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் லஞ்சம் வழங்க முற்பட்டவர் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 30 வயதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் 5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 50 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரை விடுதலை செய்யுமாறு கூறி அவரது உறவினர் 1 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இலஞ்சம் வழங்க முற்பட்டவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் இவ்விருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை