நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ ஏற்ப்பாடுகள் தீவிரம்!
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால் அதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களின் போக்குவரத்துக்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் செயலர் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் நயினாதீவு ஆலய நிர்வாகத்தினர், பிரதேச செயலாளர்கள், கடற்படை, பொலிஸார் தனியார் மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபையினர், படகு உரிமையாளர்கள், சுகாதாரத் திணைக்களத்தினர் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர். கலந்துரையாடலின் நிறைவில் கருத்துத்தெரிவித்த மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்ததாவது;
எதிர்வரும் 14ஆம்் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை காலை 5 மணிமுதல் யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்துகள் குறிகட்டுவானுக்குப் புறப்படும். காலை 6 மணிமுதல் குறிகட்டுவானில் இருந்து படகுகள் சேவை ஆரம்பிக்கப்படும். . மாலை 6 மணிமுதல் நயினாதீவில் இருந்து படகுச் சேவைகளும், இரவு 7.30 மணிமுதல் குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பேருந்துச் சேவைகளும் இடம்பெறும்.
படகுகள் சரியான பராமரிப்புக்குட்படுத்துவதற்கான பரிசீலனைகளை துறைமுக அதிகார சபையினர் மேற்கொள்வார்கள். படகில் ஏற்றப்படும் பயணிகளின் எண்ணிக்கை, படகுகளின் பயன்பாடுகள் தொடர்பில் துறைமுக அதிகார சபை கவனத்தில் எடுத்துக்கொள்ளும். படகுகளில் பயணிக்கும் பயணிகள் கட்டாயமாக உயிர்காப்பு அங்கிகள் அணிய வேண்டும்.
அதேவேளை, சிறப்புத் திருவிழா நாள்களில் அதிகமான பேருந்துச் சேவைகள் மற்றும் படகுகளை சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும். எரிபொருள் விலை அதிகரித்துள்ளதனால், படகு கட்டணம் அதிகரிக்குமாறு படகுச் சேவை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விலை நிர்ணய கட்டுப்பாடு சபையுடனான கலந்துரையாடலின் பின்னர், படகுக் கட்டணம் தொடர்பாக அறிவிக்கப்படும் –என்றார்.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஆலயத்துக்குச் செல்லும் பக்தர்களின் போக்குவரத்துக்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் செயலர் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் நயினாதீவு ஆலய நிர்வாகத்தினர், பிரதேச செயலாளர்கள், கடற்படை, பொலிஸார் தனியார் மற்றும் இலங்கைப் போக்குவரத்துச் சபையினர், படகு உரிமையாளர்கள், சுகாதாரத் திணைக்களத்தினர் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர். கலந்துரையாடலின் நிறைவில் கருத்துத்தெரிவித்த மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்ததாவது;
எதிர்வரும் 14ஆம்் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை காலை 5 மணிமுதல் யாழ்ப்பாணத்திலிருந்து பேருந்துகள் குறிகட்டுவானுக்குப் புறப்படும். காலை 6 மணிமுதல் குறிகட்டுவானில் இருந்து படகுகள் சேவை ஆரம்பிக்கப்படும். . மாலை 6 மணிமுதல் நயினாதீவில் இருந்து படகுச் சேவைகளும், இரவு 7.30 மணிமுதல் குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பேருந்துச் சேவைகளும் இடம்பெறும்.
படகுகள் சரியான பராமரிப்புக்குட்படுத்துவதற்கான பரிசீலனைகளை துறைமுக அதிகார சபையினர் மேற்கொள்வார்கள். படகில் ஏற்றப்படும் பயணிகளின் எண்ணிக்கை, படகுகளின் பயன்பாடுகள் தொடர்பில் துறைமுக அதிகார சபை கவனத்தில் எடுத்துக்கொள்ளும். படகுகளில் பயணிக்கும் பயணிகள் கட்டாயமாக உயிர்காப்பு அங்கிகள் அணிய வேண்டும்.
அதேவேளை, சிறப்புத் திருவிழா நாள்களில் அதிகமான பேருந்துச் சேவைகள் மற்றும் படகுகளை சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும். எரிபொருள் விலை அதிகரித்துள்ளதனால், படகு கட்டணம் அதிகரிக்குமாறு படகுச் சேவை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விலை நிர்ணய கட்டுப்பாடு சபையுடனான கலந்துரையாடலின் பின்னர், படகுக் கட்டணம் தொடர்பாக அறிவிக்கப்படும் –என்றார்.
கருத்துகள் இல்லை