தூத்துக்குடி சம்பவம் தொடர்பில் விரைவில் விசாரணை!

நாமக்கல்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன், நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 4 பேர் இறந்தனர். இதுபற்றி விசாரிக்க இந்த ஆணையம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் விரைவில் தூத்துக்குடி சென்று விசாரிப்பார்கள். மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளது. இதுதொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.