புங்குடுதீவு கடற்கரையில் ஆணின் சடலம் மீட்ப்பு!

தீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.


மற்றொரு சடலமும் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டது. அது தொடர்பில் சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

மன்னார் கடலில் கடந்த வாரம் மீன்பிடிக்கச் சென்ற இருவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தொழிலுக்குச் சென்ற படகு புங்குடுதீவில் கரை ஒதுங்கியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.