கண்டிக் கலவரம் – குற்றத்தை ஒப்புக் கொண்டது முகநூல்!

நாட்டில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக நாடு முழுதும் 10 நாள்களுக்கு

அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டது.அத்துடன் இந்த வன்முறை சம்பவங்களினால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கானக்கான வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் வியாபார நிலையங்கள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன.

வன்முறை ஏற்படவும், அது வேகமாக மக்கள் மத்தியில் பரவவும் முகநூலில்  பதிவிடப்பட்ட விரும்பத்தகாத வார்த்தைகள் முக்கிய காரணமாக அமைந்தமையினால் ஒரு வார காலம் நாட்டில் முகநூல் முடக்கப்பட்டிருந்தது.

சிங்கள மொழியில் சிலர் பதிவிட்ட விரும்பத்தகாத மற்றும் இனவாதத்தைத் தூண்டும் விதமாக வார்த்தைகளை அடையாளம் கண்டு நீக்கவில்லை என்று முகநூல் நிறுவனத்தின் மீது குற்றம்
சுமத்தப்பட்டிருந்து.

இதற்கு முகநூலின் ஊடக பேச்சாளர் அம்ரித் அஹுஜா “நாங்கள் தவறு செய்துவிட்டோம், நாங்கள் தாமதமாகச் செயற்பட்டோம்” என்று தமது தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இது போன்ற நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க இலங்கையில் இயங்கி வரும் முகநூல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிங்கள மொழி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில்முகநூல் நிறுவனம் தற்போது பணியில் அமர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.