கிம் ஜாங் அன் - டிரம்ப் சந்திப்பால் அமைதி ஏற்பட போப் பிரான்சிஸ் பிரார்த்தனை!

அரை நூற்றாண்டுக்கும் மேலான பகைநாடுகளாக விளங்கி வரும் அமெரிக்கா - வடகொரியா நாடுகளுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்தும் வகையிலும்,

இந்நிலையில், இந்த சந்திப்பால் உலகில் அமைதி ஏற்பட பிரார்த்திப்பதாக போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார்.


இத்தாலி நாட்டில் உள்ள வாட்டிகன் தேவாலயத்தில் இன்று நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், ‘எதிர்வரும் நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் மூலம் கொரிய தீபகற்பத்தில் வாழும் மக்களுக்கும், இந்த ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பாதையை உருவாக்கி, அமைதியான எதிர்காலத்துக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்னும் எனது சிறப்பான நட்புறவின் எண்ணத்தையும், பிரார்த்தனைகளையும் கொரிய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.


வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் சிங்கப்பூரில் வரும் 12-ம் தேதி இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேசுகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.