நியமனம் வழங்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் கிடைக்குமா?
வடக்கு மாகாணத்தில் இதுவரை நியமனம் வழங்கப்படாத 400 க்கும் அதிகமான தொண்டர் ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 5,6 ஆம் திகதிகளில் நியமனம் வழங்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாக்கிருஸ்ணன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலைச்சார், கல்வி இராஜாங்க அமைச்சர் மற்றும் மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கைதடியில் நேற்று நடைபெற்றது. உரையடாலின் பின்னர் ஊடாகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு மாகாணத்தில் கல்வி வளர்ச்சிக்கு கொழும்பு அமைச்சின் ஊடாக அனைத்து வசதிகளையும் பாடசாலைகளுக்குச் செய்து கொடுப்பேன். இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் விரிவாகக் கலந்துரையாடி உதவிகளைச் செய்வோம். தொண்டர் ஆசியர்கள் பிரச்சினை நீண்ட காலமாகக் காணப்படுகின்றது.
600க்கும் அதிகமானவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களில் 182 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மிகுதி 400 க்கும் அதிகமானவர்களுக்கு எதிர்வரும் 5,6ஆம் திகதிகளில் நியமனம் வழங்க அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
தேசிய பாடசாலைகளில் போலி நியமனங்கள் பற்றிக் கூறிவருகின்றோம். இதுவரை 63 போலி நியமனங்கள் இனம் காணப்பட்டுள்ளன. அந்த நியமனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று உரியவர்களுக்கு அறிவித்துளோம். இந்த நியமனம் தொடர்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைச்சு மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது – என்றார்.
வடக்கு மாகாண முதலைச்சார், கல்வி இராஜாங்க அமைச்சர் மற்றும் மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கைதடியில் நேற்று நடைபெற்றது. உரையடாலின் பின்னர் ஊடாகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு மாகாணத்தில் கல்வி வளர்ச்சிக்கு கொழும்பு அமைச்சின் ஊடாக அனைத்து வசதிகளையும் பாடசாலைகளுக்குச் செய்து கொடுப்பேன். இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் விரிவாகக் கலந்துரையாடி உதவிகளைச் செய்வோம். தொண்டர் ஆசியர்கள் பிரச்சினை நீண்ட காலமாகக் காணப்படுகின்றது.
600க்கும் அதிகமானவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களில் 182 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மிகுதி 400 க்கும் அதிகமானவர்களுக்கு எதிர்வரும் 5,6ஆம் திகதிகளில் நியமனம் வழங்க அமைச்சு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
தேசிய பாடசாலைகளில் போலி நியமனங்கள் பற்றிக் கூறிவருகின்றோம். இதுவரை 63 போலி நியமனங்கள் இனம் காணப்பட்டுள்ளன. அந்த நியமனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று உரியவர்களுக்கு அறிவித்துளோம். இந்த நியமனம் தொடர்பில் சிறப்பு விசாரணைக்குழு அமைச்சு மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது – என்றார்.
கருத்துகள் இல்லை