பிரதி சபாநாயகராக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளேயின் பெயர் பிரதி சபாநாயகர் பதவிக்கு பிரேரிக்கப்படும் என்று அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனை கட்சித்தரப்புக்கள் வரவேற்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அந்தப் பதவியில் இருந்த திலங்க சுமதிபால எதிர்க் கட்சிக்கு சென்றமையை அடுத்து அதில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் பெயரை அந்த பதவிக்கு ஜனாதிபதி பிரேரித்துள்ளார் என்றும் முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.