தமிழீழ இன அழிப்பு சாட்சியங்கள் புகைப்பட கண்காச்சி!

அனைத்து எம் தமிழ் உறவுகளுக்கும்,நாம் ஓர் சுய உரிமை கொண்ட இனம்.தனித்து வாழத் தகுதி கொண்டவர்கள். இலங்கைத்தீவில் எமக்கோர் நீண்ட தமிழியல் வரலாறு உண்டு. 

ஆனால் ஒடுக்கப்படும் இனமாக , சிறிலங்கா பேரினவாத அரசால் திட்டமிடப்பட்டு அழிக்கப்படும் இனமாக இன்று தேசமற்ற மக்கள் கூட்டமாக அலைகிறோம்.

இந் நிலையை நாம் சர்வதேசத்திற்கும், ஒவ்வொரு வெளியுலக மக்களுக்கும் தெளிவுபடுத்துவது எம் ஒவ்வொருவருடைய கடமையாகும் .
எதிர்வரும் யூன் 13,14,15 திகதிகளில் காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை தகவல் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் நடைபெறவுள்ள எமது மக்களின் மீதான இனப்படுகொலை சாட்சிய புகைப்பட காட்சிப்படுத்தலை உங்களது வேற்றின நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்,ஒன்று கூடுவோம் .
சமூகவலைத் தளங்களில் எமக்கு நாமே பேசிக்கோள்வதை விடுத்து உலக மக்களுக்கு எடுத்துரைப்போம் எம் இன விடுதலையை... வாருங்கள்...
வலே தமிழ்ச சங்கம்.
சுவிஸ் தமிழர் அரசியல்துறை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.