இராணுவத்திடம் தமிழ் கூத்தாடிகளின் செயலுக்கு தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள்??

கிளிநொச்சி இராணுவ அதிகாரி மாற்றம் பெற்று செல்லும்போது தமிழ் மக்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட நிகழ்வு ஊடகங்களில் பரப்பப்படுகிறது.


எந்த ராணுவம் தமிழ் மக்களை கொன்றதோ அதே ராணுவத்திற்கு தமிழ் மக்கள் மாலை மரியாதை செய்து வரவேற்பது வெட்கப்பட வேண்டிய ஒரு செயல்தான்.

இருப்பினும் இதற்காக வெட்கப்பட வேண்டியவர்கள் தமிழ் தலைவர்களே யொழிய தமிழ் மக்கள் அல்ல.

அந்த இராணுவ அதிகாரி தன் சொந்த பணத்தில் இருந்து மக்களுக்கு உதவி செய்யவில்லை. அரச பணத்தையே வழங்கியிருக்கிறார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை இருக்கிறது. ஆனாலும் இன்றும் கூட பல பதவிகள் மற்றும் உதவிகள் இராணுவத்தினூடாகவே வழங்கப்படுகிறது.

ஒரு இராணுவ அதிகாரியை நல்லவராக காட்டுவதன் மூலம் மொத்த ராணுவத்தையும் நல்லதாக காட்ட முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் அரசின் ஏவலாகவும் அதன் வன்முறைக் கருவியாக இராணுவம் இருக்கும் வரை அது மக்களுக்கு நல்ல இராணுவமாக ஒருபோதும் இருக்க முடியாது.

எமது தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்கள் மக்களுக்காக செயற்பட்டிருந்தால் மக்கள் இராணுவ அதிகாரியை வரவேற்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

இதே வட - கிழக்கில் தொகுதிக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்.

விக்னேஸ்வரன் ஒரு ஜனாதிபதி சட்டத்தரனியும் சம்பந்தன் ஒரு ஜனாதிபதி சட்டத்தரனியும் பெற்று தமது எடு பிடிகளுக்கு கொடுப்பதற்கு முடியும் என்றார் ஏன் பாவப் பட்ட தமிழ் மக்களை மட்டும் பார்ப்பது இல்லை.

இத்தனைக்கும் நடுவில் இவகளில் சம்பந்தன் அரசிடம் எதையும் கேட்டால் தீர்வு கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என வீராப்பு வேற இன்னும் இருப்பது செற்ப நாட்களே இதற்குள் ஒருவர் ஆரம்பித்து விட்டார் இராஜினாமா நாடகத்தை அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளை கடப்பதற்கான அத்திபாரம் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

ஒரு இராணுவ அதிகாரி முன்னாள் போராளிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்கிறார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்.பிக்கள் இதைப் பற்றிக் கேட்டால் ஐயா அமைத் காக்க கூறியிருக்கிறார் என்கின்றனர்.

இப்போது சொல்லுங்கள். மக்கள் இராணுவ அதிகாரிக்கு மாலை போட்டதில் யார் வெட்கப்பட வேண்டும்? பதில் உங்களிடம் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.