மைத்திரி - மஹிந்த குழுக்களுக்கு இடையில் முறுகல்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்டியின் எந்த நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களுடன் எந்தவித தொடர்பும் தமக்குக் கிடையாது எனவும் தாம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடனே உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குழு தெரிவித்தது.


நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்ற ஒரு நடவடிக்கையையே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுத்துள்ளதாகவும் இவ்வாறான மறுசீரமைப்புக்களுடன் தமக்கு எந்தவித தொடர்பும் கிடையாது எனவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.