பாலியல் குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையில் ஆசிரியர் கைது!

வட்டுக்கோட்டையில் உள்ள பிரபல தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவர், பதிமன்ம வயது மாணவிகளை வன்புனர்ந்தமை மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.


வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல தனியார் பாடசாலையின் ஆசிரியரான சுதர்சன் என்பவர் தன்னிடம் கற்கும் மாணவர்களில் பெண் மாணவிகளை தனது கல்வி நிலையத்திற்கு வர வேண்டும் என வற்புறுத்தி வந்திருக்கிறார்.

இதன் பின்னர் மாணவிகளும் ஆசிரியருக்கு பயந்து அவரிடம் தனியார் வகுப்பிற்கு செல்லவே அங்கு வைத்து அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அத்துடன் இவ்விடயத்தை பெற்றோரிடம் கூறினால் பெற்றோரை கொன்று விடுவேன் எனவும் அச்சுறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இவ் ஆசிரியரால் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்ட பதின்ம வயது மாணவிகள் சிலரால் தாம் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என சங்கானை பிரதேச சிறுவர்  அலுவலகருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இம்  முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்த மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் விசாரணைகளின் பின்னர் , மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்" என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.