யாழ்.வடமராட்சிக் கடலில்15 மீனவர் கைது!

யாழ். வடமராட்சி பருத்தித்துறைக் கடற்பரப்பில் சட்ட விரோதமான
முறையில் கடலட்டை பிடித்த 15 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்றுப் பிற்பகல்(09) வேளையில்
கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான மீனவர்கள் கடலட்டை பிடிப்பதற்காகப் பயன்படுத்திய மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கைதான மீனவர்களை யாழ்.நீரியல் வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.