நியூசிலாந்து மண்ணில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கரும்புலிகள் நாள்! - 2018

தமிழீழ கனவை சுமந்து விடுதலை வேள்வித்தீயில் தம்மைத் தாமே அழித்திட்ட அதிசய பிறவிகளை வீரமறவர்களை வணங்கிடும்
புனித நாள். இப்புனித நாளில் தமிழீழ விடியலுக்காய் சரித்திரமாகி போன கரும்புலி வேங்கைகளுக்கு  வீரவணக்கம் செலுத்தவேண்டும் என்ற வகையில் நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஓக்லாந்து நகரில் 08-07-208 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை Murray halberg park  (Range View Rd, Mount Albert, Auckland 1025) மண்டபத்தில் வீரவணக்க நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. 

மாலை 6.00 மணியளவில்   அகவணக்கத்துடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாகியது. பொதுச்சுடரினை கரும்புலி ஆகிய இலக்கியா அவர்களின் சகோதரர் சுதர்சன் அவர்கள் ஏற்றி வைத்தார்.  அதனைத் தொடர்ந்து லக்சன் அவர்களின் கரும்புலிகள் பற்றிய கவிதை  இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து கரும்புலிகளுக்கு மலரஞ்சலியுடன் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் ஜெகன் அவர்களால் கரும்புலிகள் பற்றிய பேச்சு இடம்பெற்றது.

கரும்புலிகளின் நினைவலைகள் மீட்டுப்பார்கப்பட்டு கரும்புலிகளின் நினைவுகளோடு பி.ப 6.40  மணியளவில் கரும்புலிகள் நாள் உணர்வு பூர்வமாக நிறைவு பெற்றன.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.