மரண தண்டனை விதிக்கப்பட்ட பெயர்ப்பட்டியல் நாளை வெளியீடு!

போதைப் பொருள் வர்த்தகத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியல்
நாளை நீதித்துறை அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.


போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்றுவரும் நபர்கள் சிறைச்சாலைக்குள் இருந்தே போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட காரணத்தினால் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது .

இதன் அடிப்படையிலேயே, மரண தண்டனைகள் மீள அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.