இலங்கையின் இளம் பெண்கள் கருக்கலைப்பு வீதம் அதிகரிப்பு!

இலங்கையில் 15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட இளம்பெண்கள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரித்துள்ளது என்று காசல் வீதி, மகளிர் மருத்துவமனையின் விசேட நிபுணர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.


உலக சனத்தொகை தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இதன்போது கருக்கலைப்புக்கள் தொடர்பான புள்ளி விபரங்களையும் அவர் வெளியிட்டார்.

இலங்கையில் நாளொன்றிற்கு சராசரியாக ஆயிரம் கருக்கலைப்புக்கள் நிகழ்வதாகவும் அவர் இவ்விடத்தில் கூறினார்.

15 வயதிற்கும், 19 வயதிற்கும் இடைப்பட்ட யுவதிகள் மத்தியில் கருக்கலைப்பு வீதம் அதிகரித்திருப்பது ஆராய்வின்மூலம் கண்டறிய முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,

பெண்கள் இளவயதில் கர்ப்பம் தரிப்பதும், பிள்ளை பெறுவதும் பிரச்சினைக்குரிய விடயமாகும். இதற்காக அரசாங்கம் கூடுதலான தொகையை செலவழிக்க நேர்ந்துள்ளது.” என்றார்.

இதேவேளை குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சிறப்பு நிபுணர் டொக்டர் சஞ்சீவ கொடகந்த கருத்து வெளியிடுகையில், குடும்பத்திட்டமிடல் மூலம் அநாவசிய கர்ப்பங்களை தவிர்த்துக் கொள்ளலாம் என்றார்.

இலங்கையின் சனத்தொகையும் சடுதியாக அதிகரிப்பதால் குடும்பக் கட்டுப்பாடு குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக குடும்பத் திட்டமிடல் பணியகத்தின் பணிப்பாளர் சிறப்பு நிபுணர் கீதாஞ்சலி மாபிற்றிகம குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.