கொள்ளையர்கள் வயோதிப பெண் மீது பலாத்காரம்!

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் கூரையை பிரித்து இறங்கிய கொள்ளையர்கள் வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் சுமார் 20பவுண் நகைகளையும் திருடி சென்றுள்ளனர்.


இச் சம்பவம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்று ள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 

குறித்த வீட்டில் வயோதிப தம்பதிகளான கணவன் மனைவி இருவரே வாழ்ந்து வருகின்றார்கள். கணவன் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை முகமூடி அணிந்த நிலையில்  உட்புகுந்த கொள்ளையர்கள் கணவனை கட்டிப்போட்டு அவரின் வாயினையும் கட்டி விட்டு , கணவனின் கண் முன்னால் மனைவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.

பின்னர் மனைவியின் கழுத்தில் இருந்த தாலி உட்பட 20 பவுண் நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் வீட்டினுள் சுமார் மூன்று மணி நேரம் சல்லடை போட்டு தேடுதல் நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் போதை பொருள் பாவித்து இருக்கலாம்.  அதேவேளை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 59 வயதுடைய குடும்ப பெண் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது உடல் நிலையை பரிசோதித்தமை மற்றும் அவரிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் நோக்கினால் வன்புணர்ந்தவர்கள் , போதை பொருள் பாவித்து இருக்கலாம் எனும் சந்தேகம் எழுகின்றது. மிருகதனமாகவே வன்புணர்ந்துள்ளார்கள். என வைத்திய சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.

கடந்த வாரம் பாடசாலை சென்ற சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் இடம்பெற்று அதற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மீளவும் , வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குள் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மக்கள் மத்தியில் அச்ச நிலைமையை ஏற்படுத்தி உள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.