இலங்கை-தென்னாபிரிக்கா கிரிக்கட் சுற்றுத்தொடர் ஆரம்பம்!

தென்னாபிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியது.


காலி சர்வதேச மைதானத்தில் இப்போட்டிகள் இடம்பெறுகின்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.

இதேவேளை, பங்களாதேஷ் சுற்றுத்தொடரை மேற்கொள்ளும் இலங்கை ஏ அணியின் தலைமை பொறுப்பு திஸர பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 19 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் அடங்கிய இந்திய கனிஷ்ட கிரிக்கட் அணி நேற்று இலங்கை வந்தது. இந்த வீரர்கள் இலங்கையின் கனிஷ்ட அணியுடன் நான்கு நாட்கள் நீடிக்கும் இரண்டு போட்டிகளிலும், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அடங்கிய ஐந்து போட்டிகளிலும் விளையாடவுள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.