சிறிலங்காவுக்கு சீனா தொடர்ந்து உதவி வழங்கும் – சீனத் தூதுவர்

சிறிலங்கா மக்களுக்கு நன்மை அளிக்கும்,
உதவிகளை சீனா தொடர்ந்து வழங்கும் என்று, சீனத் தூதுவர் செங் ஷியுவான் தெரிவித்துள்ளார்.
தங்காலை மருத்துவமனைக்கு மருத்துவ மற்றும் பணியக கருவிகளை அன்பளிப்பாக வழங்கிய நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் – இரண்டு நாடுகளின் மக்களுக்கிடையில், வரலாற்று ரீதியாக பல்வேறு துறைகளில் ஆழமான உறவுகள் இருந்து வருகின்றன.
சிறிலங்காவுக்குத் தேவையான உதவிகளை சீனா வழங்கி வருகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.