யாழ்.பல்கலையில் செஞ்சோலை படுகொலையின்12ம் ஆண்டு நினைவேந்தல்!

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று மதியம் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் சிறிலங்காவின் வான் படையினர் கடந்த 2006 ஆம் ஆண்டு மேற்கொண்ட தாக்குதலில் 61 மாணவிகள் கொல்லப்பட்டிருந்தனர்.

பாடசாலை மாணவிகளின் தலைமைத்துவ பயிற்சி நடைபெற்ற செஞ்சோலையில் வான்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்ட

மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று யாழ் பல்கலைக்கழகம் உட்பட தாயகத்தின் பல இடங்களிலும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.