யாழில் தந்தை சொந்த மகளையே வன்புணர்வு செய்த கொடூரம்!

தனது சொந்த மகளை வன்புணர்வுக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் யாழ். வலி வடக்குப் பகுதியில் தந்தையாரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


தாயாரால் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சிறுமியின் தந்தையார் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் குறித்த சிறுமி வைத்தியப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.