முல்லைத்தீவு மக்கள் கலைஞர் கருணாநிதியின் மறைவை வெடி கொழுத்தி கொண்டாட்டம்!

கலைஞர் கருணாநிதியின் மறைவை முல்லைத்தீவு மாவட்ட மக்கள் வெடி கொழுத்தி கொண்டாடியுள்ளனர். சென்னை காவேரி மருத்துவ மனையில் கலைஞர் காலமானதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் மக்கள் வீதியில் வெடிகள் கொழுத்தி மகிழ்ந்துள்ளார்கள்.


இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பிற்கு கருணாநிதியும் காரணமாக இருந்தார் என்றும் அவர் நினைத்திருந்தால் ஈழத்தமிழ் மக்களின் உயிர்களை காப்பாற்றி இருக்கமுடியம் என்றும் தமிழர்களின் இன அழிப்பிற்கு காரணமாக அமைந்த ஒரு காரணத்திற்காக அவரின் இறப்பிற்கு மகிழ்ச்சி வெளிப்படுத்தி வெடிகொழுத்தி கொண்டாடியுள்ளதாக வீதியில் நின்ற மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

 கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணி போற்றத்தக்கது எனவும் வெடிகொழுத்திய மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.