முன்னாள் போராளிகளுக்கு அரச நியமனம் மகிழ்ச்சி என்கிறார் ஆளுநர்!

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள்போராளிகள் 30 பேருக்கு பட்டதாரிநியமனம் வழங்கப்பட்டமை மிகுந்தமகிழ்சி அளிப்பதாக வடமாகாணஆளுநர் றெஜினோல்ட் குரேதெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பெற்ற போராளிகளுக்கானஅரச நியமனங்கள் அலரிமாளிகையில். நேற்று   பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவினால் வழங்கிவைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில்தனது மகிழ்சியை தெரிவித்து ஆளுநர்  அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறுதெரிவித்துள்ளார்.

புலிகள் அமைப்பிலிருந்து இறுதியுத்தத்தில் சரணடைந்த போராளிகள்புனர்வாழ்வின் பின்னர் தமதுஉறவினர்களுடன் இணைந்துகொண்டனர். அவர்களில்பட்டதாரிகளாக காணப்பட்ட பலர் கடந்த2017 ஆரம்பத்தில் சுண்டுக்குளியில்அமைந்துள்ள எனது அலுவலகத்தில்என்னை சந்தித்து ஒருகோரிக்கையினைமுன்வைத்திருந்தனர்.

அதாவதுபட்டதாரிகளுக்கான அரச பணிநியமனங்களில் தமது பெயர்களும்உள்வாங்கப்படவேண்டும் என்பதாகும். அதற்கு அமைய கடந்த 2017.07.26  அன்றுகௌரவ அமைச்சர் சுவாமிநாதன்அவர்களுக்கு நான் எழுத்து மூலம்முன்வைத்த ஆலோசனையினை ஏற்றுகௌரவ அமைச்சர் அமைச்சரவைபத்திரத்தினை

முன்வைத்து நிறைவேற்றி இப்போராளிகளுக்கும்நேற்று (20.08.2018) அரச பணிநியமனத்தினை வழங்கியிருக்கின்றார்.அவருக்கும் எனது மனமார்ந்தநன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஏற்கனவே கடந்த வருடம் 35 புனர்வாழ்வுபெற்ற போராளிகள் பட்டதாரிகள்நியமனத்தில் உள்வாங்கப்பட்டு அரசபணிக்கு அமர்த்தப்பட்டார்கள். மேலும்இரண்டாம் கட்டமாக நேற்றயதினம் 30புனர்வாழ்வு பெற்ற போராளிகள் அரசபணிக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.

சமாதானத்திற்கு இது ஒருமுன்னேற்றகரமான சம்பவமாகஅமைக்கின்றது. இதுபோன்று மேலும்பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசசேவைகள் கிடைக்க ஒத்துழைப்பினையும் வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.