யாழில் வைத்தியரின் வீட்டில் அட்டகாசம் செய்த வாள்வெட்டுக் குழு!

யாழ். கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக இன்று மதியம் அரை மணிநேர கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாக்குதலாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த வைத்தியர்கள், கைது செய்யப்பாடத விடத்து, தாம் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தனர்.

யாழ். கொக்குவில் சம்பியன் ஒழுங்கையில் உள்ள வைத்தியரின் வீட்டுக்குள் நேற்று அத்துமீறி உள்நுழைந்த வாள் வெட்டுக்குழு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்திய பின்னர் தப்பி சென்றமையை கண்டித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.