பேருந்து குடைசாய்ந்ததில் 20 பேர் காயம்!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் இன்று (26) மாலை 5 மணியளவில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 

நாவலப்பிட்டி பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று பத்தனை மவுண்ட்வேர்ணன் பகுதியில் மண்மேடில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதில் பேருந்தில் பயணித்தவர்கள் காயங்களுடன் அவர்கள் உயிர் தப்பியுள்ளதாகவும், காயங்களுக்குள்ளாகியவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்து பேருந்தை கட்டுபடுத்த முடியாமல் போனதே இவ்விபத்துக்கான காரணம் என தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.