வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதக்காட்சி!


முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் மகாகும்பாபிஷேக பெருஞ்சாந்திவிழாவில் (26.03) நேற்று ஆரம்ப யாகபூசை வழிபாட்டின்போது அம்மனுக்கு தீப ஆராதனையின்போது அம்மனின் திருவுரும் தென்பட்டு அங்கிருந்த பக்க அடியார்களுக்கு அருள் பொழிந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்யை தினம் வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்றுவரும் கர்மாரம்பம் யாக தீப ஆராதனையின்போது தீபத்தில் தோன்றிய அம்மன் நாட்டில் பல பகுதிகளிலிருந்து அங்குவந்திருந்த அம்மனின் அடிய பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார். இவ்வாறு ஒவ்வொரு வருடமும் இடம்பெற்றுவரும் வற்றாப்பளை அம்மனின் ஆலய திருவிழாவின்போது ஒவ்வொரு விதமாக அம்மனின் அற்புதக்காட்சிகள் தென்படுவதுடன் அம்மனின் தரிசனத்தைப்பெற்றுக்கொள்வதற்கு நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் பக்த அடியார்கள் புடைசூழ்ந்து வந்து கலந்துகொள்கின்றனர்.  27, 28, 29 ஆகிய மூன்று தினங்களும் அம்மனுக்கு எண்ணைக்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்று மகாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினைத் தொடர்ந்து அம்மனின் ஆலயத்தில் 45நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.