தெற்கு அதிவேக வீதி விபத்தில் 17 பேர் காயம்!

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ வௌியேறும் வாயிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று காலை 07.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்றின் ஒரு பக்க சில்லொன்று வெடித்ததால், அந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலமை மோசமானதாக இல்லை என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்மீமன பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.