நெடுங்கேணியில் விபத்து: இருவர் காயம்!

வவுனியா நெடுங்கேணி ஐயன்கோவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்தனர்.  காயமடைந்தவர்கள் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பேருந்தின் மீது முல்லைத்தீவு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பேருந்தின் பின்பகுதியில் மோதியயே விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் வவுனியா கன்னாட்டி பிரதேசத்தை சேர்ந்த யெகயோதி (வயது60) பெண்ணும் மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞனும் காயமடைந்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.