யாழில் அகற்றப்படாத இராணுவ முகாம்!

யாழ். வலி. வடக்கில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் 3 இராணுவ முகாம்கள் அகற்றப்படாமல் இன்னும் இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
.
683 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான இராணுவ முகாம்கள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பது சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளதாக தெரியவருகின்றது.
மேலும், 150 மீற்றர் நேர்வழிப் பாதை முற்கம்பிகளால் அடைக்கப்பட்டு அதற்கு பதிலாக தனியாரின் காணிகளினூடாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.