யானையுடன் லொறி மோதி விபத்து!

மஹியங்கனை - கிராந்துருகோட்டை பிரதான வீதி ஹத்தன்னாவ பிரதேசத்தில் நேற்று இரவு சிறிய ரக லொறி ஒன்று காட்டு யானை ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மெதிரிகிரிய - திவுலன்கடவல பிரதேசத்திலிருந்து வெல்லவாய நோக்கி பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி சாரதி எதிரே வந்த யானையை கண்டவுடன் லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முயற்சித்த பொழுது இவ் விபத்து சம்பவித்துள்ளது.இந்நிலையில் லொறியில் 13 பேர் பயணித்துள்ளதாகவும், இதில் 4 பேர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் நீண்ட காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் காணப்பட்ட போதிலும் இதனால் பல விபத்து சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.