வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!

வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் உள்ள இலுப்பைக்குளத்தில் நேற்று இரவு குளித்து கொண்டு இருந்த 39 வயதுடைய நபர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.